Get paid To Promote at any Location

கொள்ளு சூப் தயாரிக்கும் முறை (சளி மருந்து)

கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இது சளிக்கு சரியான மருந்து. மேலும் இது என் சுய அனுபவத்தில் பயன்படுத்தி குணமடைந்திருக்கிறேன். .

கொள்ளு சூப் தயாரிக்கும் முறை

கொள்ளு - 2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
கறிவேப்பிலை - சிறிது

இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.4கப் தண்ணீரில் கரைத்து,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.

கண்ணும் உணவும்

நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (Anti - Oxidants) Macula -வை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

பசலைக் கீரை, முருங்கை, அகத்திக் கீரை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நலம்.

தாவர உணவு வகைகளில் பெறப்படும் இரும்புச்சத்து, இறைச்சியில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட குறைவாகவே உடலில் கலந்தாலும், வைட்டமின் சி-ஆல் இரும்புச் சத்து உடலில் கலப்பது மேம்படுகிறது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. தினசரி சமையல் முறையில் பல வகையான பச்சை காற்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். ஆனால் அதை கூடிய மட்டும் அதன் சத்துகள் குறையா வண்ணம் சமைப்பது அவசியம்.

Anti oxidants

நம் உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் காரணம் Free Radical fns என்பது அனைவராலும் ஏற்கப்பட்ட மருத்துவ உண்மை, நம் உயிரைத் தக்கவைப்பது பிராணவாயு. ஆனால் அதே பிராணவாயுதான் நம் நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணம் என்று நம்மில் பலருக்கு தெரியாது.


வைட்டமின் இ, சி மற்றும் ஏ, தக்காளி, திண்ணிய பூக்கோசு வகை, காலிஃப்ளவர், பூண்டு, மிளகு, பசலை, தேயிலை, காரட், சோயா மற்றும் முழு தானிய வகைகளிலிருந்து நாம் Anti-oxidant களை பெறலாம். நிறக்கலவை அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவைகளில் தாவர உயிர்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய்.

காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.

வைட்டமின் ஏ உணவு : தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

கண் பராமரிப்பில் அமினோ அமிலங்கள் :

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்புரை நோய், க்ளுகோமா என்ற கண் விழி விறைப்பு நோய், குறிப்பாக கண் உள்ளிருக்கும் ரத்தக் குழாய்களை சேதடையச் செய்யும் டயாபெடிக் ரெடினோபதி ஆகியவைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் அமினோ அமிலங்கள் அல்லது புரத அமிலங்கள் இந்நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு அமினோ அமிலச் சத்துகளை வாய் வழியாக கொடுப்பதன் மூலம் சர்க்கரை நோயின் புறவிளைவுகளை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

கண்கள் உங்களைக் காக்க, நீங்கள் கண்களை காத்துக் கொள்ளுங்கள்

நன்றி : யாழ்

நோயற்ற வாழ்க்கைகு நாடுவோம் அரைக்கீரை

தினந்தோறும் உண்ணும் கீரையில் அரைக்கீரை முதலிடத்தை பெறுகிறது. இக்கீரையில் இரும்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. பத்திய வகை உணவுக்கு தோதான கீரை இது, இக்கீரை தாதுவை வலுப்படுத்தி உடல்பலத்தை பெறுக்குவதில் தூதுவளைக்கு நிகரானது என்றும், உடலில் தேங்கும் வாய்வு, வாதநீர்களை போக்குவதில் முருங்கைகீரைக்கு சமமானது என்றும் கூறுவார்கள். நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும்,பலனும் தரக்கூடியது. அரைக்கீரையை நாள்தோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும் கொடுக்கும்.
இந்த கீரையை பழுப்பு இலைகள் இல்லாமல் சுத்தமாக ஆய்ந்து கழுவி விட்டு சமைக்க வேண்டும். இக்கீரையில் வைட்டமின் அ, சி இரண்டும் அதிக அள்வில் உள்ளன. மேலும் புரத்ச்சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் நார்சத்துகளுக்கும் குறைவில்லை.இதனை அடிக்கடி உபயோகித்து வந்தால் உடலின் எல்லா பாகங்களும் சீரான வளர்ச்சியை பெறும்.தேகபலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும், மலச்சிக்கலை போக்கி குடலை சுத்தமாக வைத்திருக்க உதவும். இதயத்திற்கு வலிமை தரும்.
இக்கீரை சித்த வைத்தியத்திலும் அதிகமாக பயன்படுகிறது.இக்கீரையின் விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைகீரை தைலம் மிகவும் புகழ்பெற்ற தைலமாகும். இது கண்ணுக்கு குளிர்ச்சியையும், தலைமுடி செழித்து வளரவும் உதவுகிறது. இக்கீரைக்கு மற்ற கீரைகளை பிடுங்குவதுபோல் செடிகளை வேரோடு பிடுங்க கூடாது. வேண்டிய கீரைகளை கத்தி அல்லது கத்திரியை கொண்டு வெட்டி எடுத்துக் கொள்ளலாம், அல்லது கையால் கிள்ளி பறித்துக் கொள்ளலாம். இவ்வாறு கிள்ளி பறிப்பதனால்தான் கிள்ளுக்கீரை என்றும் அழைக்கிறார்கள்.
இக்கீரையோடு மிளகு, பூண்டு, பெருங்காயம், இஞ்சி, வெங்காயம் சேர்த்து உப்பிட்டு கடைந்து, சாதத்தில் நெய்விட்டு பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். இப்படி சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இக்கீரை பசியை உண்டாக்குவதும், நுரையீரல் நோய்களை குணமாக்குவதும், வாதம், பித்தம், வாய்வு போன்றவற்றை தடுப்பதும் இக்கீரையின் இயல்பான குணமாகும். சளி இருமல்,கபம் மற்றும் நரம்பு தளர்ச்சிக்கும் நல்லது. இதனை சாம்பாராகவும் வைக்கலாம். இதன் தண்டுகளை கழுவி எடுத்து பூண்டு, மிளகு, இஞ்சி சேர்த்து அவித்த சாற்றில் ரசம் வைத்தும் சாப்பிடலாம்.

நோயற்ற வாழ்க்கைகு நாடுவோம் அரைக்கீரை.

கட்டுடலை பேணிக்காக்கும் புரதம். . .

ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை சரிவிகித உணவுகள், சரிவிகித உணவில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, உயிர்ச்சத்துகள் போன்ற சத்துக்கள் உடல்நலத்தை பாதுகாக்க துணை புரிகின்றன. இதில் புரதச் சத்து மிக முக்கிய பங்காற்றுகிறது. உடல் வளர்ச்சிக்கும், உடல் பராமரிப்பு பணிக்கும் புரதச் சத்து இன்றியமையாததாகிறது. மேலும் புதிய திசுக்கள் வளர்ச்சி பெறச் செய்யவும் உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும் புரதம் துணை புரிகிறது.

புரதச் சத்துக்களின் பயன்கள் :

எலும்பு வளர்ச்சி, மண்ணீரல், கல்லீரல், திசுக்கள் வளர்ச்சி, பித்த நீர்ப்பை, நிணநீர்ப்பை, கணையம், தைமஸ் இவற்றின் பண்புகளையும் பணிகளையும் செவ்வனே செய்வதில் துணை புரிகிறது. கொழுப்பு சக்தியை உபயோகிப்பதிலும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்தி, உணவு செரித்தல், உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்தல் போன்ற பணிகளை செவ்வனே செய்கின்றது. மேலும் வயது முதிர்வதை தள்ளிப்போடுதல், திசுக்களை புதுப்பித்தல், இரத்த சோகையை வரும்முன் காத்தல், பற்கள், நுரையீரல், இரத்தக் குழாய்கள், இதயம் இவற்றை பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும், தசை திசுக்களின் ஆற்றலை அதிகப்படுத்துவதிலும் புரதத்தின் பங்கு இன்றியமையாததாகிறது. முடி உதிர்வதை தடுத்து மயிர்க்கால்களுக்கு ஆரோக்கியத்தையும், பளபளப்பையும் கொடுத்து, கட்டுடல் பெற செய்து அழகும் வனப்பும் பெற செய்ய புரதச் சத்து உதவுகிறது.

புரதச்சத்து காணப்படும் காய் மற்றும் கனி வகைகள்

காய்கறிகள்


கீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயறு வகைகள், முளைவிட்ட சோயா, முட்டைகோஸ், காலிபிளவர், முளைவிட்ட கொண்டைகடலை, வெங்காயம்.

பழங்கள்

கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், ப்ளம்ஸ், மாதுளம் பழம், அத்திப்பழம்.

முதல் தரமான புரதச் சத்து காய் கனிகளிலா அல்லது இறைச்சி வகைகளிலா என்றால் எதுவும் முதல்தரம், இரண்டாம் தரம் என்றில்லை. எல்லாம் ஒரே தரமேதான்.

மாமிசம் எல்லா புரத சத்துக்களையும் ஒரே உணவில் அபரிமிதமாக தான்.

காய்கனிகளில் புரதச்சத்து தனித்தனியே இருக்கும். அவற்றை தனித்தனியே உட்கொள்ள அவை எல்லாம் ஒருங்கிணைந்து வேலை செய்யும். எனவே சைவ உணவு உட்கொள்பவர்கள் கவனமாக உணவை சரிவிகிதத்தில் சேர்த்து உண்ணவும்.

காரட்டிலும், பீட்ரூட்டிலும், கீரை வகைகளிலும் ஐசோலூசின் மற்றும் மெத்தியோனின் என்ற புரதசத்துக்கள் காணப்படுவதில்லை.

ஐசோலீசின் என்ற புரதம் : தைமஸ் சுரப்பிகள், மண்ணீரல், பிட்யூட்டரி சுரப்பி, இரத்த ஹீமோகுளோபின்களின் ஆற்றலை மேம்படுத்துகிறது. எனவே, ஐசோலீசினில் காணப்படும் உணவான பப்பாளிப்பழம், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.

இந்தப் புரதம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இரத்தச் சிவப்பு அணுக்களையும் ஹீமோகுளோபின் என்ற இரத்த திரவத்தையும் உற்பத்தி செய்வதில் பயன்படுகிறது.

இதே போல மெத்தியோனின் என்ற புரதமும், காரட், பீட்ரூட்களில் காணப்படுவதில்லை.

மெத்தியோனின் புரதத்தின் பணி இரத்த சிவப்பு அணுக்கள், மண்ணீரல், பித்த நீர் சுரப்பிகளில் சுரக்கும் ஆற்றலை மேம்படுத்த உதவும்.

முட்டைகோஸ், காலிபிளவர், பூண்டு, அன்னாசி, ஆப்பிள் போன்றவற்றில் மெத்தியோனின் உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

எனவே புரதம் காணப்படும் காய்கனிகளை அளவோடு சரிவிகிதத்திலும் சேர்த்துக் கொண்டால் உங்கள் அறிவுத் திறனையும், உடல் திறனையும் மேம்படுத்தி கட்டுடலையும் கண்டிப்பாகப் பெறலாம்.

நன்றி : வெப்துனியா

சிறுகீரை


சிறுகீரை ஒரு சத்து மிகுந்த கீரையாகும். இது மருத்துவ மகத்துவம் வாய்ந்தது. இந்தக் கீரையையினால் உடலுக்கு அழகும் வனப்பும் கிடைக்கும்.இது காச நோய்,படலம்,பாதரச வேகம், வெரணம், மூத்திரக் கிரிச்சர வீக்கம், பித்த் நோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவைகள் நீங்கும்.
மேலும் இக்கீரை வாத நோயை நீக்க கூடியது என்பார்கள்.அத்துடன் கல்லீரலுக்கும் நன்மையைச் செய்யும். விஷக்கடி முறிவாக பயன்படக்கூடிய இக்கீரை , சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் அகற்றவல்லது,
பயிரிடப்படும் முறை
இக்கீரை இந்தியாவெங்கிலும் தோட்டப்பயிராகவும், காட்டுப்பயிராகவும் பயிரிடப்படுகிறது. வீட்டுத்தோட்டங்களிலும் பயிரிடலாம். இக்கீரையை பயிரிடுவதற்கு முன் இதற்குரிய பாத்தியை முன்பே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். கோடக்கால இறுதியில் விதைகளை அதிக நெருக்கமில்லாமல் விதைப்பது நல்லது. விதைத்த பாத்திகளில் பூவாளியினால் தண்ணீரை காலை வேளைகளில் தெளிப்பது நல்லது. இகீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும்.நிழல் கூடாது, வெளிச்சம் மிகுதியும் தேவை. 25 நாட்களில் கீரை தயாராகிவிடும். 40 அல்லது 50 நாட்களில் இக்கீரையை செடியோடு பிடுங்கி உபயோகப்படுத்தலாம்.
இச்சிறுகீரையில் உள்ள சத்துக்கள்:
சக்தி - 33 கலோரி, நீர்சத்து - 90கிராம், புரதம் - 2.8கிராம், கொழுப்பு - 0.3கிராம், தாதுக்கள் - 2.1கிராம், கார்போஹைட்ரேட் - 4.8கிராம், கால்சியம் - 251 மில்லி கிராம், பாஸ்பரஸ் - 55 மில்லி கிராம், இரும்பு - 27.3 மில்லி கிராம் ஆகிய சத்துக்கள் உள்ளன.

இக்கீரையுடன் சீரகம், மிள்கு, சோம்பு, வெங்காயம், இஞ்சி, தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்து சூப் வைத்தும் சாப்பிடலாம், கீரையை கடைந்து சாதத்துடனும் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும் என்பார்கள்.
நல்ல சுவையும் நாவிற்கு ருசியும் உடலுக்கு வலுவும் கொடுக்கும் இக்கீரையை வீட்டுத்தோட்டங்களில் வளர்த்து உணவுடன் சேர்த்து பயனடையுங்கள்.

இதயத்தை பாதுகாப்பது எப்படி?

2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும்.


உணவுக் கட்டுப்பாடு
முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற... என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கட்டுப்பாடான உணவு மற்றும் அதன் அளவுகோலும்
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 - 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்த மொத்த அளவில், 65% சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியை கொழுப்பிலிருந்தும், 15% சக்தியை புரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!

ஆரோக்கியமான சக்திகளை எந்த மாதிரி உணவுகளில் இருந்து பெறலாம்?
அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசி யையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்! பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும்.

கொழுப்புச் சத்து பற்றி?
அதைப் பற்றி விரிவாகவே கூற வேண்டும். கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகை உண்டு. ஆடு, மாடுகளின் மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய், வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும். தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு. இவற்றிலிருந்து கொழுப்புச் சக்தியை பெறுவதுதான் ஆரோக்கியம்! மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய் வகைகள் உள்ளன.

எண்ணெயைப் பற்றி:
‘சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றை தவிர்த்துவிட வேண்டும். ‘அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கடலை எண்ணெய் போன்ற ‘மோனோ அன்சாச்சுரேட்டட்’ வகை எண்ணெயிலுள்ள சத்தும் உடலுக்கு தேவை என்பதால், இவற்றையும் பயன்படுத்தலாம் என்கிறார்கள். இவற்றைவிட ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’ வகைதான் இதயத்துக்கு மிக நல்ல தோழன். இந்தச் சத்தை கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம். எப்போதுமே ஒரே வகை எண்ணெயை உபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க, பொரிக்கக் கூடாது. ஒரு முறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.

பயமில்லாமல் சாப்பிடக் கூடிய உணவு வகை
இயற்கை கொடுக்கும் காய்கறிகள் உள்ளனவே! அவை இதயத்தின் நண்பர்கள். அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்த கலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை. எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தொட்டுக்க வைப்பதை சாதமாகவும், சாதத்தைத் தொட்டுக்கவும் உபயோகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தேடி வரும்!

சில காய்கறியின் பயன்கள்
கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும் நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன. வெங்காயம், பூண்டு இரண்டுமே நல்லது. கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்கு நார்ச்சத்து மிகவும் நல்லது. எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டியது & உயிர் வாழத்தான் உண்ண வேண்டும். உண்ணுவதற்காகவே உயிர் வாழக் கூடாது!
உடல் எடை என்பது பேங்க் பாலன்ஸ் மாதிரி. சாப்பிடச் சாப்பிட, ஏறிக்கொண்டேதான் போகும். பணத்தை எடுத்து செலவழித்தால்தானே பாலன்ஸ் குறையும்? அதுபோல, உடலின் சக்தியை செலவழித்தால்தான் எடை குறையும்!’’

ஹெல்த் டிப்ஸ்...
எடை அதிகம் இருப்பவர்களுக்கு, கழுத்து குட்டை யாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். குறட்டை விடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், எடையைக் கட்டாயம் குறைக்க வேண்டும். எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. காலையில் ஒரு மகாராஜா போலவும் (விருந்து) இரவில் ஒரு பிச்சைக்காரர் போலவும் (குறைவான உணவு) சாப்பிட வேண்டும் என்பார்கள். மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்து குறைவு. ஆனால், அதன் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை! ‘‘டயட்டினால் எடையைக் குறைக்கலாம். ஆனால், உடற்பயிற்சியால்தான் அதை அப்படியே பராமரிக்க முடியும்’’
! ‘‘ஹர்ரி (அவசரம்), கறி (மாமிசம்), வொர்ரி (கவலை) மூன்றையும் நிறுத்தினால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்!’’

புளிச்ச கீரை

பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்புட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள்.இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்த கீரையை "கோங்குத்ரா சட்னியாக" செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்த கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கல்ந்துள்ளன. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு என்பார்கள். சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் என்பார்கள். காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.
பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகபடுத்தும் குணமுடையது.
இதில் உள்ள சத்துக்கள்:
இரும்பு சத்து - 2.28 மில்லி கிராம்
வைட்டமின் ஏ - 2898 மைக்ரோ கிராம்
மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி அகியவை உள்ளன.