Get paid To Promote at any Location

சளித் தொல்லை

சளித் தொல்லை வந்தால் மூக்கை உறிஞ்சிக் கொண்டு மூலையில் படுத்துவிடவேண்டாம். இதற்கு எனக்கு தெரிந்த முறைகளை சொல்கிறேன். அதை பயன்படுத்தி பயன் அடைந்தால் மகிழ்ச்சியே.
1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!

2. அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!

3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.

6.கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

8. மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.

10.சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.

13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்

14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

15. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)

16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.

8 comments:

Anonymous said...

உண்மையிலேயெ சளித்தொல்லை மாதிரி ஒரு கஷ்டத்தை அனுபவிச்சாத்தான் தெரியும். ரொம்ப நன்றி

said...

இடுகைக்கு நன்றிகள்!

said...

வரவுக்கு நன்றி ஜீவா.

said...

இக்பால்! அக்கறையுடனான தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி..

மூக்கிலிருந்து நீராக வெளிவரும் சளி நீர், பின் இறுகிப் போவதுண்டு; சில நேரங்களில் வரட்சி இறுமலுக்குக் கொண்டு போய்விடுவதும் உண்டு.
வரட்சி இருமல் என்பது உடல்சூடு அதிகமாகி தொண்டையில் 'குறுகுறு' உணர்வேற்படுத்தி தொடர்ந்த இறுமலைத் தோற்றுவிக்கும்..வெறும் இறுமலாக இருக்குமே தவிர, எந்த சளியும் வராது..தொடர்ந்து இந்த இறுமல் தொல்லையிருந்தால், கொஞ்சம் அரிசி எடுத்துக்கொண்டு அதனுடன் கொஞ்சம் மிளகு சேர்த்து, வாயில் போட்டுக் கொண்டு இலேசாக அரைத்து மென்று வரும் அரிசி கலந்த மிளகு ஜூஸை தொண்டைக் குழியில் படும்படி கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால், இந்த இறுமல் தொல்லை தொடராது. இந்த பாட்டி வைத்தியம், என் அனுபவத்தில் பலன் கிடைத்த ஒன்று.

said...

தங்கள் அனுவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜீவி.

said...

நல்ல பதிவு.

said...

நல்ல விளக்கமான பதிவு

said...

நல்ல விளக்கம். பகிற்விர்க்கு நன்றி. நீங்கள் சொன்னவற்றில் 2 முறைகளை பின்பற்றினேன், ஜலதோஷம் ஓடிப் போய்விட்டது. கூடவே 3 நாட்கள் குல்லவையும் போட்டிருந்தேன் நல்ல பலன் கிடைத்தது. நன்றி. :)

இன்னொரு விளக்கம் விக்கிபீடியாவில் பார்த்தேன், இங்கே பகிர்கிறேன்.
"மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்."
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%28%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%29

அன்புடன்,
ராம்.